ஶ்ரீ ப4க3வானுவாச1 |
ப்1ரஜஹாதி1 யதா3 கா1மான்ஸர்வான்பா1ர்த2 மனோக3தான் |
ஆத்1மன்யேவாத்1மனா து1ஷ்ட2: ஸ்தி2த1ப்1ரஞ்ஞஸ்த1தோ3ச்யதே1 ||55||
ஶ்ரீ-பகவானுவாச—--ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; ப்ரஜஹாதி— --நிராகரித்து;யதா—--எப்பொழுது; காமான்— சுய ஆசைகள்; ஸர்வான்— அனைத்து; பார்த—- பார்த்தா, ப்ரிதாவின் மகனே; மனஹ-கதான்--—மனதின்; ஆத்மனி—- சுயத்தின்; ஏவ—--மட்டுமே; ஆத்மனா—--தூய மனதால்; துஷ்டஹ—-- திருப்தி அடைந்த; ஸ்தித-ப்ரஞ்ஞஹ— --அறிவொளி பெற்ற; ததா—--அப்பொழுது; உச்யதே—-- கூறப்படுகிறது
BG 2.55: பகவான் கூறினார்: ஒருவன் மனதைத் துன்புறுத்தும் புலன்களின் அனைத்து சுயநல ஆசைகளையும், வேட்கைகளையும் நிராகரித்து சுயத்தை உணர்ந்து திருப்தி அடையும் போது, அத்தகைய நபர் ஆழ்நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்க ஆரம்பித்து அத்தியாயம் முடியும் வரை தொடர்கிறார். பூமியை நோக்கிய ஈர்ப்பு விசையால் ஒரு கல் ஈர்க்கப்படுவது போல, ஒவ்வொரு துண்டுகளும் இயற்கையாக அதன் முழுமையை நோக்கி இழுக்கப்படுகின்றன. தனிப்பட்ட ஆன்மா என்பது கடவுளின் ஒரு பகுதி, அவர் எல்லையற்ற பேரின்பம். எனவே, ஆன்மா எல்லையற்ற ஆனந்தக் கடலின் ஒரு துண்டாகும், மேலும், அது பேரின்பத்திற்கான இயற்கையான தூண்டுதலை அனுபவிக்கிறது. கடவுளிடமிருந்து ஆன்மாவின் பேரின்பத்தை அனுபவிக்க முயற்சிக்கும் போது, அது 'தெய்வீக அன்பு' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அதன் ஆன்மீக இயல்பை அறியாமல், அது தன்னை உடலாக நினைத்து, உலகத்திலிருந்து உடலின் ஆனந்தத்தை அனுபவிக்க முற்படும்போது, அது 'காமம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த உலகம் ஒரு மான் பாலைவனத்தில் காணும் கானல் நீர் ம்ருக3 த்1ரிஷ்ணா என்று வேதத்தில் அழைக்கப்படுகிறது. சூடான பாலைவன மணலில் பிரதிபலிக்கும் சூரியக் கதிர்கள், மான்களுக்கு நீரின் மாயையை (கானல் நீர்), உருவாக்குகின்றன. தனக்கு முன்னால் தண்ணீர் இருப்பதாக நினைத்து தாகம் தீர்க்க ஓடுகிறது. ஆனால் அது எவ்வளவு அதிகமாக நீரை நோக்கி ஓடுகிறதோ, அந்த அளவுக்கு மிரட்சி மறைந்துவிடும். அது ஒரு மாயையின் பின்னால் ஓடுவதை அதன் மந்தமான அறிவால் அடையாளம் காண முடியாது. துரதிர்ஷ்டவசமான மான் மாயையான தண்ணீரைத் துரத்திக்கொண்டே பாலைவன மணலில் சோர்வால் இறந்துவிடுகிறது. அதுபோலவே, ஜட சக்தியான மாயாவும், மகிழ்ச்சியின் மாயையை உருவாக்குகிறது. அந்த மாயையான மகிழ்ச்சியின் பின்னால் நம் புலன்களின் தாகத்தைத் தணிக்கும் நம்பிக்கையில் ஓடுகிறோம். ஆனால் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், மகிழ்ச்சி நம்மிடமிருந்து மேலும் மறைந்து கொண்டே இருக்கிறது. க3ருட3 பு1ராணம் கூறுகிறது:
ச1க்ரத4ரோ ’பி1 ஸுரத்1வம் ஸுரத்1வலாபே4 ஸக1லஸுரப1தி 1த்1வம்
ப4வ்தி1ரும் ஸுரப1திரூர்த்வக3தி1த்1வம் த1தா2பி1 நனிவர்த1தே1 த்1ருஷ்ணா (2.12.14)
‘ஒரு அரசன் உலகம் முழுவதற்கும் பேரரசனாக இருக்க விரும்புகிறான்; பேரரசர் ஒரு தேவலோக கடவுளாக இருக்க ஆசைப்படுகிறார்; ஒரு விண்ணுலக கடவுள் சொர்க்கத்தின் அரசன் இந்திரனாக இருக்க முயல்கிறார்; மற்றும் இந்திரன் இரண்டாம் படைப்பாளியான ப்ரஹ்மாவாக இருக்க விரும்புகிறான். ஆயினும், பொருள் இன்பத்தின் தாகம் தணியாது.
ஆனால், ஒருவர் மனதை ஜட மயக்கங்களிலிருந்து விலக்கி, புலன்களின் ஆசைகளைத் துறக்கக் கற்று கொள்ளும்போது, அத்தகைய நபர் ஆன்மாவின் உள்ளார்ந்த பேரின்பத்துடன் தொடர்பு கொண்டு, மற்றும் ஆழ் நிலையில் இருக்கிறார். ஆசைகளைத் துறந்தவன் கடவுளைப் போல் ஆகிவிடுகிறான் என்று க1டோ2ப1நிஷத3ம் கூறுகிறது:
யதா3 ஸர்வே ப்1ரமுச்1யந்தே1 கா1மா யே ’ஸ்ய ஹ்ருதி3 ஶ்ரித1ஹ
அத2 மர்த்1யோ ’ம்ருதோ1 ப4வத்1யத்1ர ப்3ரஹ்ம ஸமஶ்னுதே1 (2.3.14)
‘ஒருவன் எல்லா சுயநல ஆசைகளையும் இதயத்திலிருந்து நீக்கிவிட்டால், ஜடப்பொருளால் கட்டப்பட்ட ஜீவாத்மா பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து விடுதலையை அடைந்து, தெய்வீகமான அறத்தை உடையதாக ஆகிறது.' ஸ்ரீ கிருஷ்ணர் மேற்கண்ட வசனத்தில், புலன்களின் சுயநல ஆசைகளை மற்றும் சுய திருப்தியை .துறந்தவர் ஆழ்நிலையில் உள்ளவர் என்று கூறுகிறார்.